சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.360 ஆக உயர்ந்து, ரூ.37,248 விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கடந்த மாதம் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், கடந்த 4 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன்பு வரலாறு காணாத அளவில் தங்கம் விலை உச்சத்தை தொட்டது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு சவரன் தங்கம் ரூ.36,256 வரை குறைந்தது. இதனால் நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தங்கம் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், கடந்த 4 நாட்களாக தங்கம் விலை திடீரென அதிகரிக்க தொடங்கியது.