பள்ளிக்கு பிறகான கல்வி உதவி தொகை திட்டத்திற்க்கான நிதியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம்

சென்னை: பள்ளிக்கு பிறகான கல்வி உதவி தொகை திட்டத்திற்க்கான நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவி தொகையை குறைக்கக் கூடாது என முதல்வர் கூறியுள்ளார். உதவி தொகைக்கு தேவையான முழு தொகையையும் தமிழக அரசு ஏற்றல் நிதிச்சுமை ஏற்படும். அதனால் 60:40 என்ற விகிதத்தில் மத்திய அரசு உதவி தொகையை தொடர்ந்து வழங்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

Related Stories: