காரைக்கால்: புரெவி புயல் முன்னெச்சரிக்கையாக காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. காரைக்கால், புதுச்சேரியில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் செயல்படும் நிலையில் தற்போது காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புரெவி புயல் காரணமாக நேற்று முன்தினம் முதல் காரைக்காலில் கனமழை பெய்து வருகிறது. இன்று விடியற்காலை அதிதீவிர கனமழை பெய்து வந்ததன் காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் தர்மா உத்தரவு பிறப்பித்திருக்கின்றார். காரைக்காலில் விடாது பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாமிட்டு பாதிப்பு ஏற்படும் பகுதிக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.