பெங்களூரு: தார்வார்டு கிராம பஞ்சாயத்து உறுப்பினர் கொலை வழக்கில் பெலகாவி சிறையில் அடைக்கப்பட்டுள்ள வினய் குல்கர்னிக்கு சொகுசு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடகத்தில் உள்ள சிறைகளில் கைதிகளுக்கு அவர்கள் கொடுக்கும் லஞ்சத்திற்கு ஏற்ப சலுகைகள் மற்றும் சொகுசு வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதாக சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி ரூபா குற்றம் சாட்டியிருந்தார். இவரிடம் சிக்கியது தமிழகத்தை சேர்ந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாதான்.இந்நிலையில் பெலகாவி சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் வினய்குல்கர்னிக்கு, சொகுசு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருப்பதாக ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன. தார்வார்டு கிராம பஞ்சாயத்து உறுப்பினர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில் சி.பி.ஐயால் கைது செய்யப்பட்ட வினய்குல்கர்னிக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.