சென்னை: புரெவி புயல் தற்போது மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பாம்பனுக்கு 420 கி.மீ. தொலைவிலும் குமரியில் இருந்து 600 கி.மீ. தொலைவிலும் புரெவி புயல் உள்ளதாக ஆய்வு மையம் கூறியுள்ளது. இலங்கை திருகோணமலைக்கு 200 கி.மீ. தொலைவில் புயல் நகர்ந்துவருவதாக வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.