ராமேஸ்வரம்: வங்கக்கடலில் மையம் கொண்டு இருக்கும் புரெவி புயல் வலுவடைந்ததை தொடர்ந்து பாம்பன் துறைமுகத்தில் ஏழாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், இன்று காலை முதல் ராமேஸ்வரம் தீவு பகுதியில் வீசி வரும் தொடர் சூறைக்காற்றால் கடல் கடுமையான சீற்றம் ஏற்பட்டு கொந்தளிப்புடன் காணப்படுகிறன. ராமேஸ்வரம் சேராங்கொட்டை கடற்கரை ஓரத்தில் உள்ள சிமெண்ட் சாலை கடல் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்தது. மேலும், அரிச்சல்முனையிலுள்ள காவல் மையம் கடல் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்து சரிந்து விழும் அபாயத்தில் உள்ளது.