கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சை பெற்று வந்த குஜராத் ராஜ்யசபா பாஜ எம்.பி உயிரிழப்பு

சென்னை: கொரோனாவிற்கு பிந்தைய சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குஜராத் ராஜ்யசபா பாஜ எம்.பி அபே பரத்வாஜ் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். குஜராத் மாநிலத்தை சார்ந்த ராஜ்யசபா பாஜ எம்பி அபே பரத்வாஜ் கொரோனாவிற்கு பிந்தைய சிகிச்சைக்காக கடந்த அக்டோபர் 9ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அதிதீவிர நுரையீரல் தொற்று இருந்ததால் உயிர்காக்கும் கருவிகள் மூலம் 50 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில், நேற்று மாலை 4.35 மணிக்கு அபே பரத்வாஜ் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: