ஏர் கலப்பை பேரணி 5ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: காங்கிரஸ் அறிவித்த ஏர்கலப்பை பேரணி சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 5ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  மத்திய பாஜ அரசின் விவசாய விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்று புதன்கிழமை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் நடத்துவதாக இருந்த ஏர் கலப்பை பேரணி புயல், மழை காரணமாக வரும் 5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.  சென்னை மாவட்டத்தை தவிர்த்து மற்ற மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் வரும் 5ம் தேதியன்று தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட ஏதாவது ஒரு சட்டமன்றத் தொகுதியில் ஏர் கலப்பை பேரணியை சிறப்பாக நடத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: