ராஜ்யோத்சவ விழாவில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு

கோலார்: கோலார் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த ராஜ்ேயாத்சவ தின விழாவில் பல துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கி  கவுரவிக்கப்பட்டது.

 கோலார் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ராஜ்ேயாத்சவ விழா கொண்டாப்படுகிறது. அதன்படி இவ்வாண்டு விழா மாவட்ட  நிர்வாகத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது.

இதில் பல துறைகளில் சாதனைப்படைத்த என்.ஆர்.புருசோத்தன் (பத்திரிகை), பாலகிருஷ்ணப்பா  (நாட்டுபுறகலை), கே.ஆர்.நரசிம்மன் (வரலாற்று ஆய்வாளர்), அனந்தராம் (பத்திரிகை), அஞ்சஅஷ்வத் (விளையாட்டு) உள்பட 21 பேருக்கு மாவட்ட  கலெக்டர் சத்யபாபா ராஜ்யோத்சவா விருது வழங்கி கவுரவித்தார். விழாவில் கூடுதல் கலெக்டர் டாக்டர் சினேகா, மாவட்ட கன்னட வளர்ச்சி மற்றும் பண்பாட்டு துறை அதிகாரி ரவிகுமார், கோலார் மாவட்ட கன்னட  சாஹித்ய பரிஷத் தலைவர் நாகேந்திர கெம்புராஜ், கோலார் மாவட்ட பத்திரிகையாளர் சங்க தலைவர் முனிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: