துரைப்பாக்கம்: கனமழை காரணமாக தண்ணீர் சூழ்ந்துள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதி, துரைப்பாக்கம் ஒக்கியம் மடு, முட்டுக்காடு முகத்துவார பகுதிகளில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். அவரது வருகையையொட்டி உத்தண்டி கிழக்கு கடற்கரை சாலை சென்டர் மீடியனில் ெகாடி கம்பம் நடும் பணியில் நாவலூரை சேர்ந்த தியாகராஜன் (33) மற்றும் சிலர் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் தியாராஜன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.