முதல்வர் வருகைக்காக கிழக்கு கடற்கரை சாலையில் அதிமுக கொடி நட்டவர் மின்சாரம் பாய்ந்து பலி

துரைப்பாக்கம்: கனமழை காரணமாக தண்ணீர் சூழ்ந்துள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதி, துரைப்பாக்கம் ஒக்கியம் மடு, முட்டுக்காடு முகத்துவார பகுதிகளில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி  ஆய்வு செய்தார். அவரது வருகையையொட்டி உத்தண்டி கிழக்கு கடற்கரை சாலை சென்டர் மீடியனில் ெகாடி கம்பம் நடும் பணியில் நாவலூரை சேர்ந்த தியாகராஜன் (33) மற்றும் சிலர் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் தியாராஜன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

கானத்தூர் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் தியாகராஜன் இறந்ததை கேள்விபட்டு அவரது உறவினர்கள், மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால், உடலை பார்க்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது. உயிரிழந்த தியாகராஜன், நாவலூர் பகுதி தேமுதிக கிளை செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: