நன்றி குங்குமம் தோழி
* தோல் திக்கான எலுமிச்சைப் பழமாக இருந்தால் பழரசம் சரியாக வராது. அதற்கு 5 நொடி மைக்ரோ அவனில் வைத்து கசக்கி பிறகு நறுக்கி பிழிந்தால் நல்ல சாறுடன் இறங்கும்.* தேங்காய் துவையல் செய்யும்பொழுது சீவிய மாங்காய் துண்டுகளை சேர்த்து அரைத்தால் நல்ல ருசி தரும்.
- என்.உமாமகேஸ்வரி, நங்கநல்லூர்.*மஞ்சள் முள்ளங்கியை வேகவைக்கும்போது 1 டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்து வேகவைத்தால் வாசனையாக இருக்கும்.- நா.செண்பகா, பாளையங்கோட்டை.* காலிஃப்ளவர் கூட்டு செய்யும் பொழுது பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, வெங்காயத்தை தாளித்துக் கொட்டி சிறிது மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, இன்ஸ்டன்ட் எலுமிச்சம் பொடி சேர்த்து செய்தால் சுவை வித்தியாசமானதாக இருக்கும்.* ஊறுகாய் போடும் முன் உப்பை வெறும் கடாயில் வறுத்து ஆறவைத்துக் கொண்டு பிறகு அதில் ஊறுகாய்க்கான காய்களை போடலாம். இப்படி செய்தால் ஊறுகாய் சீக்கிரம் கெடாமலும், நன்றாக ஊறியும் இருக்கும்.- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.* புதினா சாற்றுடன் கொஞ்சம் மிளகுத் தூளும், வேண்டிய அளவு தேனும் கலந்து கலக்கிக் குடித்தால் வயிற்றுவலி குணமாகும்.- தஞ்சை ஹேமலதா, வெண்டையம்பட்டி.* கடலைப்பருப்பு, பச்சரியை சேர்த்து 2 மணி நேரம் ஊறவைத்து அரைத்து அதனுடன் சிறிது உப்பு, தேங்காய்த்துருவல், வெல்லம், ஏலத்தூள் கலந்து இட்லித்தட்டில் ஊற்றி வேகவைத்து எடுத்தால் ‘இட்லி டிலைட்’ தயார்.* சிறிய ஜவ்வரிசி, அரிசி ரவை, தயிர், தேங்காய்த்துருவல், கொத்தமல்லி, மிளகாய் விழுது, உப்பு சேர்த்து கலந்து 5 மணி நேரம் ஊறவிடவும். நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்து மாவில் சேர்த்து இட்லித்தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்க ‘முத்து இட்லி’ தயார்.- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.* தேங்காய் எண்ணெயில் வெந்தயம் போட நெய் போல உறையாது.* கல் உப்பில் காம்புடன் பச்சைமிளகாயை போட உப்பில் நீர் வராது.* காம்புக் கிள்ளிய பச்சைமிளகாய், மஞ்சள் பொடி தூவி கண்ணாடி பாட்டிலில் போட வாடாது, பழுக்காது.- சு.கெளரிபாய், பொன்னேரி.* சப்பாத்தி செய்து பாத்திரத்தினுள் வைத்து மூடி கொஞ்ச நேரம் கழித்து எடுக்கும் போது சிறிது விறைப்பாக இருக்கும். இதைத் தடுக்க சிறு சிறு இஞ்சித் துண்டுகள் நான்கு போட்டு வைத்தால் எப்போது எடுத்தாலும் மிருதுவாக இருக்கும்.- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.* அகத்தி இலையை நீரில் போட்டு அவித்து அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டு வந்தால் நாக்கு புண் ஆறும்.- சண்முகத்தாய் செல்லையா, சாத்தூர்.*ரசம் தயாரிக்கும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரை சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்.- ஆர்.அம்மணி ரெங்கசாமி, தேனி.* முட்டைக்கோஸ் சாற்றுடன் கேரட் சாறு கலந்து குடித்தால் கண் பார்வை கூர்மை பெறும்.- நா.செண்பகவல்லி, பாளையங்கோட்டை.