ராமேஸ்வரம்: நிவர் புயல் கரையை கடந்ததையடுத்து, 8 நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று காலை மீன் பிடிக்க கடலுக்கு புறப்பட்டு சென்றனர். நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 8 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 800க்கும் அதிகமான விசைப்படகுகள் துறைமுகத்தில் பாதுகாப்பாக கரை நிறுத்தப்பட்டன. நிவர் புயல் கரையை கடந்ததையடுத்து, பாக்ஜலசந்தி கடலில் இயல்புநிலை திரும்பியது.