சென்னை: 3,400 இடங்களில் அரசு பள்ளி மாணவர்கள் 405 பேருக்கு மட்டும் மருத்துவ இடம் கிடைத்திருப்பது வேதனை அளிப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நடப்பாண்டில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் 8.41 லட்சம். இதில் 3.44 லட்சம் பேர், அதாவது 41 சதவிகிதம் பேர் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள். தமிழகத்தில் உள்ள 25 அரசு மருத்துவ கல்லூரிகளில் 3400 இடங்கள் உள்ளன. மொத்தமுள்ள 3400 இடங்களில் 405 இடத்தில்தான் அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.