மதுரை: பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும் வழக்கில் மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையை சேர்ந்த புஷ்பவனம் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு பதிலளிக்க உத்தர பிறப்பித்தனர்.