பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், ஒருநாள் முன்னதாகவே தேதி பிரிண்ட் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள், நேற்று வினியோகம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். நாமக்கல் மாவட்ட ஆவின் மூலம் தினமும் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்து காலை மற்றும் மதியம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு பாக்கெட்டிலும் அதன் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் எவ்வளவு நாட்கள் வைத்து பயன்படுத்த வேண்டும் என்ற தகவல்கள் பிரிண்ட் செய்தும், அந்த பால் எந்த வகையை சேர்ந்தது என்பதை மக்கள் அறிய பச்சை, நிலம், ஆரஞ்ச் நிற பாக்கெட்டுகளில் நிரப்பி வினியோகிக்கப்படுகிறது. குளிர் சாதன பெட்டிகளில் வைத்து பழைய பால் பாக்கெட்டை தவறுதலாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என்பதற்காக, பால் விற்பனைக்கு அனுப்பும் தேதியை, ஆவின் நிறுவனம் அச்சிட்டு விற்பனைக்கு அனுப்புகிறது.
ஆனால், பள்ளிபாளையத்தில் நேற்று(27ம் தேதி) காலை ஆவின் பால் பாக்கெட் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.