சென்னை: காஞ்சிபுரம் நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று நடத்திய அதிரடி சோதனையில் ₹3.90 லட்சம் லஞ்சப் பணம் சிக்கியது. இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.காஞ்சிபுரம் ரங்கசாமிகுளம் அருகில் கோட்ரம்பாளையம் நகர் ஊரமைப்பு (டிடிசிபி) அலுவலகம் உள்ளது. இங்கு துணை இயக்குநராக கவிதா பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில், இடங்கள் விற்பனை மற்றும் கட்டிடங்கள் கட்ட அனுமதி பெற வேண்டும். இதனால் எப்போதும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், அதிகளவில் காத்திருப்பார்கள். அவர்களிடம், டிடிசிபி அதிகாரிகள் ஒரு சதுரடிக்கு ஒரு ரூபாய் வீதம் கமிஷன் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ெதாடர்ந்து புகார்கள் சென்றன.