வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே விளாம்பட்டி காவல்நிலையத்தில் எஸ்ஐயாக இருப்பவர் கனகராஜ். இவர் நேற்று நிலக்கோட்டை பஸ்நிலையம் முன்புள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்து விட்டு வடைகளை பார்சல் வாங்கியுள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்று பார்சலை பிரித்து ஒரு பருப்பு வடையை சாப்பிட முயன்றார். அப்போது வடையில் ஒரு முழு பிளேடு இருந்தது.