சென்னை: டிசம்பர் மாதத்துக்கான ரேஷன் பொருட்கள் வாங்க 29ம் தேதி முதல் 3 நாட்கள் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படுகிறது.இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் சஜ்ஜன்சிங் ரா சவான் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் கூட்டுறவு துணை ஆணையாளர்களுக்கு நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:டிசம்பர் மாத அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் பெற 29ம் தேதி (நாளை), 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய மூன்று நாட்கள் வீடுதோறும் சென்று நியாய விலை கடை ஊழியர்கள் மூலம் டோக்கன் வழங்க வேண்டும்.