சென்னை: 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் மரம் அறுக்கும் இயந்திரம் எடுத்து செல்லப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து டிஎம்.எஸ்., வளாகத்தில் உள்ள, 108 ஆம்புலன்ஸ் மாநில கட்டுப்பாடு அறையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி: நிவர் புயலால் ஏற்படும் அவசரகால தேவைக்காக, 465 ஆம்புலன்ஸ்கள் பிரத்யேகமாக தயார் நிலையில் உள்ளன. கடலோர பகுதிகளில், 30 ஆம்புலன்ஸ்கள் உள்ளன.