சென்னை: நிவர் புயல் நெருங்கி வரும் நிலையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் காரைக்கால், நாகையில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள், மீனவர்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. துறைமுகம் வழியாகவோ அல்லது அதன் அருகிலோ புயல் கரையை கடக்கலாம் என்பதே 7ம் கூண்டு எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக மாறியது. தமிழக கடலோர பகுதியில் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. சென்னைக்கு அருகே 470 கி.மீ தொலையிலும், புதுச்சேரிக்கு அருகே 410 கி.மீ. தொலைவிலும் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது.