மதுரை: மணல் திருட்டு வழக்கு தொடர்ந்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு கோரிய வழக்கில், பணம் உள்ளவர்களுக்கு மட்டும் தான் பாதுகாப்பா என்றும் சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகும் போலீசாரின் போக்கில் மாற்றம் இல்லை, மணல் மாஃபியாக்களுக்கு பாதுகாப்பாக செயல்படுகின்றனர் என்றும் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், அகரம் பகுதியில் இரவு நேரங்களில் நடக்கும் மணல் திருட்டை தடுக்கக்கோரி பாலகிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். வழக்கை தொடர்ந்ததால், தன்னை சிலர் மிரட்டுவதாகவும், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரியும் மேலும் ஒரு மனு செய்திருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட் கிளை போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் வீடியோ கான்பரன்சில் ஆஜராகி விளக்கமளித்தார். அப்போது நீதிபதிகள், ‘‘மணல் கொள்ளை குறித்து வழக்கு தொடர்ந்தவரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதால்தான் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.