பெரம்பூர்: சென்னை கொடுங்கையூர் எழில்நகர் 16வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (40). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி உமா மகேஸ்வரி (38). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். உமாமகேஸ்வரிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று உமாமகேஸ்வரி, டாஸ்மாக் கடையில் மதுவாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதை அவரது மகள் பார்த்துவிட்டதால் உமாமகேஸ்வரிக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன வருத்தத்தில் இருந்த உமாமகேஸ்வரி, நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் மின்விசிறி கொக்கியில் தூக்கில் தொங்கிகொண்டிருந்தார்.