கம்யூனிஸ்ட் நூற்றாண்டு நிறைவு விழா

மதுராந்தகம்: கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடந்தது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மதுராந்தகம் தேரடி தெருவில் நடந்தது. சிபிஎம் மதுராந்தகம் வட்ட செயலாளர் கே.வாசுதேவன் தலைமை தாங்கினார்.வி. சசிகுமார், எம்.எஸ்.அர்ஜுன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மத்தியகுழு உறுப்பினர் சௌந்தரராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதி மாவட்ட செயலாளர் இ.சங்கர், மாநிலக்குழு உறுப்பினர் வி.பிரமிளா, மாவட்ட குழு உறுப்பினர் டி.கிருஷ்ணராஜ் மாவட்ட குழு உறுப்பினர்கள் மாசிலாமணி, எஸ்,ராஜா,செய்யூர் வட்ட செயலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நூற்றாண்டு நிறைவு விழா காணும் கம்யூனிஸ்ட் இயக்கத்தால் இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பேசப்பட்டது.

Related Stories: