ஆவடி: ஆவடி வெல்லானூர் 2வது பகுதியை சேர்ந்தவர் கதிரவன்(45). நில புரோக்கர். குடிப்பழக்கம் உடையவர். இவர் நேற்று முன்தினம் இரவு ஆவடி - கோயில் பதாகை மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினார். பின்னர் அவர் போதையில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அதே மெயின் ரோட்டில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே தலையில் அடிபட்டு கதிரவன் பரிதாபமாக பலியானார்.