எதிர்ப்போர் யாவரும் விலகுவீரே: தமிழ்நாட்டின் விதிமாறும் இனி காண்பீர்...அமித்ஷா தமிழக வருகையையொட்டி சி.டி ரவி டுவிட்.!!!

சென்னை: அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தேசியத் தலைவருமான அமித்ஷா இன்று (21ம் தேதி) சென்னை வருகிறார். இன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை, மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டம், கோயம்புத்தூர், அவினாசி சாலையில் ரூ.1,620 கோவியில் உயர்மட்ட சாலைத் திட்டம்,காமராஜர் துறைமுகத்தில் ரூ.900 கோடியில் புதிய இறங்கு தளம் அமைக்கும் திட்டம் ஆகியவற்றிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும், அமித்ஷா, தமிழக பாஜக நிர்வாகிகளுடன் நாளை இரவு ஆலோசனையும் நடத்துகிறார். அமித்ஷா முன்னிலையில் பல்வேறு முக்கிய தலைவர்கள் பாஜகவில் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தமிழகத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றனர்.

இந்நிலையில், அமித்ஷாவின் வருகையால் தமிழ்நாட்டின் விதிமாறும் என தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிடி ரவி, எதிரிகள் அவர்தம் படை புகுந்து நைய புடைய எம்தலைவன் வருகிறார். தமிழ்நாட்டின் விதிமாறும் இனி காண்பீர். எதிர்ப்போர் யாவரும் விலகுவீரே என்று பதிவிட்டு #TNwelcomesAmitshah என்ற ஹாஷ்டேக் பதிவிட்டுள்ளார். மேலும், #TNwelcomeschanakya ஹாஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி இந்தியளவில் 2-ம் இடத்தில் உள்ளது.

Related Stories: