லண்டன்: இங்கிலாந்தில் நடைபெறும் நிட்டோ ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் லீக் சுற்றில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 2-1 என நேர் செட்களில் கிரீசின் சிட்சிபாசை வீழ்த்தி அரையிறுதியை உறுதிப்படுத்தினார். கூடவே டொமினிக் தீமை வீழ்த்தி ஆந்த்ரே ருப்லே ஆறுதல் வெற்றி பெற்றார். உலகின் 2ம் நிலை வீரரான ரபேல் நடால், லண்டன் 2020 பிரிவு லீக் சுற்றில் ஆஸ்திரியவை சேர்ந்த 3வது நிலை வீரர் டொமினிக் தீமிடம் அதிர்ச்சி அடைந்தார். அதனால் அவரது அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியானது. இந்நிலையில் தனது கடைசி லீக் போட்டியில், உலகின் 6ம் நிலை வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாசுடன் மோதினார். அதன் முதல் செட்டை போராடி 6-4 என்ற கணக்கில் நடால் கைப்பற்றினார். ஆனால் அடுத்த செட்டில் வேகம் காட்டிய சிட்சிபாஸ் 6-4 என்ற கணக்கில் வசப்படுத்தினார். அதனால் கடைசி செட் கூடுதல் எதிர்பார்பை ஏற்படுத்தியது. அந்த செட்டில் அதிவேகம் காட்டிய நடால் 6-2 என்ற கணக்கில் எளிதில் வென்றார். அதனால் 2-1 என்ற செட்களில் வெற்றிப் பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்தினார். இந்தப் போட்டி 2மணி 4 நிமிடங்கள் நீடித்தது.