பேரறிவாளனை விடுதலை செய்ய மறுப்பது அநீதி: ராமதாஸ் டிவிட்

சென்னை: பேரறிவாளனை விடுதலை செய்ய மறுப்பது அநீதி என பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:பேரறிவாளன் குற்றமற்றவர் என விசாரணை அதிகாரி கூறிவிட்டார். விடுதலைக்கு தடையில்லை என உச்ச நீதிமன்றமும் கூறிவிட்டது. அமைச்சரவையும் பரிந்துரைத்து விட்டது. ஆனாலும் பேரறிவாளனை விடுதலை செய்ய மறுப்பது அநீதி. உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

மற்றொரு பதிவில், ‘லடாக் பகுதியில் நடந்த விபத்தில் கோவில்பட்டியை சேர்ந்த ராணுவவீரர் கருப்பசாமி வீரமரணம் அடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தேசத்தை பாதுகாக்கும் பணியில் இன்னுயிரை ஈந்த வீரருக்கு பாமக சார்பில் வீர வணக்கம். அவரது குடும்பத்திற்கு இரங்கலும், அனுதாபமும்’ என கூறியுள்ளார்.

Related Stories: