சென்னை: பேரறிவாளனை விடுதலை செய்ய மறுப்பது அநீதி என பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:பேரறிவாளன் குற்றமற்றவர் என விசாரணை அதிகாரி கூறிவிட்டார். விடுதலைக்கு தடையில்லை என உச்ச நீதிமன்றமும் கூறிவிட்டது. அமைச்சரவையும் பரிந்துரைத்து விட்டது. ஆனாலும் பேரறிவாளனை விடுதலை செய்ய மறுப்பது அநீதி. உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.