மக்களின் குறைகளுக்கு தீர்வு காண ஏற்படுத்தப்பட்ட இ-சேவை மையம் காகித அளவிலேயே உள்ளது: நீதிபதி அதிருப்தி

சென்னை: மக்களின் குறைகளுக்கு தீர்வு காண ஏற்படுத்தப்பட்ட இ-சேவை மையம் காகித அளவிலேயே உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார். நீலகிரி மசினகுடியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஜெயினுலாபுதீன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில் பொதுமக்கள் மனுவுக்கு பதில் அளிக்காத அதிகாரிகளின் மெத்தன போக்குக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: