தமிழகத்தில் புதிதாக 1,707 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் புதிதாக 1,707 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 19 பேர் மட்டும் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று 67,115 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 1,707 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் சென்னையில் 471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 64 ஆயிரத்து 989 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 2,251 பேர் குணமடைந்துள்ளனர். மாநில அளவில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 532 பேர் குணமடைந்துள்ளனர்.  13 ஆயிரத்து 907  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 18 பேர் கொரோனாவால் இறந்தனர்.  இதனால் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,550 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: