டெல்லி: கொரோனா தடுப்பின் முன்களப் பணியாளர்களாக ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு மருத்துவக் கல்வியில் உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வியின் மத்திய தொகுப்பில் இருந்து உள்ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய குடும்பநல அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பில் முன்கள பணியின்போது உயிரிழந்தவர்களை கவுரவிக்கும் விதமாக உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வார்டுகளில் பணிபுரியும் பணியாளர்களின் வாரிசுகளுக்கு உள்ஒதுக்கீடு பொருந்தும் எனவும் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில், முதல் ஆரம்பமாக மத்திய தொகுப்பில் இருந்து 2020 - 21 கல்வியாண்டுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் சிகிச்சை பணி, கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களை கவுரவிக்கும் வகையிலேயே இந்த உள்ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருக்கிறது.