தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: மாலத்தீவு அருகே ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, புதுக்கோட்டை , கன்னியாகுமரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட வடமாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். மேலும், அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: