கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கம்

சென்னை: கொரோனா பாதிப்பு தொடங்கியது முதல் மின்சார ரயில்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. ரயில்வே ஊழியர்களுக்காக சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டது. இந்த சிறப்பு மின்சார ரயில்களில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பயணம் செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்தது.

கடந்த சில நாட்களுக்கு முன் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் அனைவரும் பயணம் மேற்கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்தது. இதையடுத்து தற்போது கூடுதலாக இன்று முதல்  244  மின்சார ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: