மதுரை: ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்காக சட்டம் இயற்ற எவ்வளவு காலம் தேவைப்படும் என உயர்நீதிமன்ற கிளை கேள்வி கேட்டுள்ளார். சட்டம் இயற்றப்படுமா? விதியாக அமல்படுத்தப்படுமா? என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவ.24-க்கு உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்தது.