வேல் யாத்திரைக்காக கடலூர் நோக்கி பயணம்: நடிகை குஷ்புவின் கார் விபத்து; போலீசார் விசாரணை

சென்னை: சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு வேல் யாத்திரைக்காக கடலூர் நோக்கி காரில் மதுராந்தகம் அருகே சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரி மீது குஷ்பு சென்ற கார் திடீரென மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் பின்பக்க கதவு மட்டும் சேதம் அடைந்துள்ளதாகவும் மற்றும் நடிகை குஷ்புக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து நடிகை குஷ்பு கூறுகையில், கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் கார் மட்டுமே சேதம் அடைந்தது. இவ்விபத்தினால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என கூறினார். உங்கள் ஆசீர்வாதங்களுடனும் கடவுளின் கிருபையுடனும் நான் பாதுகாப்பாக இருக்கிறேன்.

வேல் யாத்திரைக்காக கடலூர் நோக்கிய பயணம் தொடரும். முருகப்பெருமான் எங்களை காப்பாற்றியுள்ளார்; என் கணவர் முருகனின்  மீது வைத்திருக்கும் நம்பிக்கை இப்போது காணப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: