சேலம்: சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர் பசுபதி(25). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 15ம்தேதி நிறைமாத கர்ப்பிணியான சிறுமியை அழைத்துக்கொண்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். பிரசவ வார்டில் இருந்த டாக்டர் விசாரணையின்போது, சிறுமிக்கு 15 வயது என்றதும் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் அதே நாளில்(15ம் தேதி) சிறுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இது சுகப்பிரசவமாகும். இந்த தகவலை அறிந்த அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சம்பவ இடம் வந்து அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.அப்போது பரபரப்பு தகவல் வெளியானது. வாலிபர் பசுபதி, ஈரோட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது 15 வயதே ஆன சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பலமுறை சிறுமியை ஏமாற்றி அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதனை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் பசுபதியை அழைத்து கண்டித்தனர்.