சென்னை: குமரிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக தூத்துக்குடியில்தான் 170 மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், குமரிக்கடல் பகுதியில் நேற்று புதியதாக ஒரு காற்றழுத்தம் உருவாகியுள்ளது.