சென்னை: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னை வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 15 நாட்கள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார். இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று மாலை 5.02 மணிக்கு இந்திய விமானப்படை தனி விமானத்தில் தெலங்கானா மாநிலம் பேகம்பேட்டிலிருந்து சென்னை வந்தார். சென்னை பழைய விமானநிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் வரவேற்றனர். அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பின்பு விமான நிலையத்திலிருந்து சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள டாக்டர் சேஷாத்திரி அவின்யூவிற்கு சென்றார்.