சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் ெவளியில் சுற்றுவதற்கு 200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே மாஸ்க் அணிகின்றனர். இந்நிலையில், சென்னையில் கொரோனா விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் வசூலிக்கும் நடைமுறையை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாக துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.