சென்னை: பிரான்சு ஒரேயால் தமிழ் கலாச்சார மன்றம் மற்றும் உலக தமிழ் சங்கம் மதுரை இணைந்து வழங்கிய `முத்தமிழ் விழா - 2020’’ல் இணையவழி நேரலையில் நேற்று முன்தினம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பேசியதாவது: தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமே அல்ல. அதுதான் நமது வாழ்வின் வழி. தமிழ் மொழி என்பது சொற்களும் அதன் பொருளும் இணைந்த கூட்டுத் தொகுப்பு அல்ல. அதுதான் நம்முடைய அடையாளம். உலக மொழிகளுக்கெல்லாம் உயர் மொழியாய் திகழ்வது, நமது அன்னை தமிழ்மொழியே ஆகும். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2005ம் ஆண்டில் பிரான்ஸ் ஒரேயால் தமிழ் கலாச்சார மன்றத்தை தொடங்கி வைத்து, அதனை இன்றளவும் சிறப்புடன் செயல்படுத்தி வரும், அதன் தலைவர் இலங்கை வேந்தன், செயலாளர் கிருஷ்ணராஜ் ஆகியோரை பாராட்டுகிறேன்.