சென்னை: சென்னை சென்ட்ரல்-திருப்பதி- சென்ட்ரல் இடையே வரும் 19ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை சென்ட்ரல்- திருப்பதி இடையே முன்பதிவு செய்த சிறப்பு ரயில் (06057) தினமும் காலை 6.25 மணிக்கு புறப்பட்டு அம்பத்தூர், அரக்கோணம், திருவள்ளூர், திருத்தணி வழியாக திருப்பதிக்கு காலை 9.45மணிக்கு சென்றடையும்.