நாகை: நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களையே புரட்டி போட்ட கஜா புயல் வீசி 2 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனாலும் உப்பளத் தொழிலாளர்கள் விவசாயிகள் என பலரும் இன்னும் புயலின் தாக்கத்தில் இருந்து மீள முடியாத சூழலிலேயே உள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி நள்ளிரவில் வீசிய கஜா புயலால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். மீனவர்கள், விவசாயிகள் என பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பாதிப்புக்குள்ளாகினர். வீடுகளை இழந்த சிலருக்கு மீண்டும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டாலும் நூற்றுக்கணக்கானோர் முறையான வீடுகள் இன்றி இன்றும் தவித்து வருகின்றனர். வேதாரண்யத்தில் பாதிக்கப்பட்ட உப்பளத் தொழிலாளர்களை நேரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். அச்சமயம் அரசு தருவதாக உறுதி அளித்த நிவாரணத் தொகை 2 ஆண்டுகள் ஆகியும் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.