டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு பணிகளுக்காக ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆலையை திறக்க வேண்டும் என்ற ஸ்டெர்லைட்டின் இடைக்கால கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆலையை மூட வேண்டும்வென்று முடிவெடுத்தது அரசின் கொள்கை முடிவு என தமிழக அரசு கூறியுள்ளது. இடைக்கால நிலவாரணம் கோர ஆலைக்கு எந்த முகாந்திரமும் கிடையாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.