ஆனைமலை: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அமாவாசை உள்ளிட்ட விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்துச் செல்கின்றனர். இதில் நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு அமாவாசை துவங்கியதையடுத்து, கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. பலர் தீபாவளி புத்தாடை அணிந்து வந்திருந்தனர்.