திருமலை: திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர கார்த்திகை பிரமோற்சவம் கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரமோற்சவத்தின் 5ம் நாளான நேற்று காலை பத்மாவதி தாயார் பல்லக்கு உற்சவம் நடைபெற்றது. இதில் தங்க, வைர அலங்காரத்தில் தாயார் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார். பிரமோற்சவத்தையொட்டி ஆந்திர மாநில அரசு கொறடா பாஸ்கர் ரெட்டி பத்மாவதி தாயாருக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தார்.