சென்னை: வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள், அணைகள் வேகமாக நிரம்பத் தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், குமரி கடல் முதல் அந்தமான் கடல் பகுதி வரை உள்ள வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது படிப்படியாக நகர்ந்து, தமிழக கடற்பகுதியை நெருங்கி வருகிறது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று பல இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்களில், பல இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.