சிவகாசி: ரூ.1200 கோடி பட்டாசுகள் விற்பனையாகாததால் பட்டாசு உற்பத்தியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளதோடு மீண்டும் பட்டாசு உற்பத்தியை தொடங்குவதில் சிக்கல் உள்ளதாக தகவல் பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். எதிர்காலம் கேள்விகுறியானதால் தொழிலாளர்கள் கலக்கத்தில் உள்ளதாக கூறினர். வெளிமாநிலத்துக்கு ஆனுப்பப்பட்ட சிவகாசி பட்டாசுகள் பெருமளவில் தேக்கம் அடைந்தது. தமிழ்நாட்டிலும் பட்டாசு விற்பனை மந்தமானதால் உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். வரலாறு காணாத இழப்பால் பட்டாசு உற்பத்தியாளர் விற்பனையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். எதிர்காலம் கேள்விகுறியானதால் 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்கள் கலக்கம் அடைந்தனர்.