காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கோல்டி பிரேமாவதி வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2020-21ம் ஆண்டு நடப்பு சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிருக்கு திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் இப்கோ டோக்கியோ நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதில், அரசு வழிகாட்டுதலின்படி மொத்த இழப்பீடு தொகையில் 80 சதவீதம் தமிழக அரசும், 20 சதவீதம் காப்பீடு நிறுவனமும் வழங்க உள்ளன. சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.451 பிரீமியம் தொகை செலுத்த வேண்டும்.