புதுடெல்லி: தீபாவளியை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள், மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது தீபாவளி வாழ்த்து செய்தியில், ‘இந்த தீபாவளி நன்னாளில் ஏழைகள், ஆதரவற்றவர்கள், உதவிகளை எதிர்ப்பார்பவர்களுடன் உங்களிடம் இருப்பதை பகிர்ந்து கொள்ளுங்கள். அனைவருக்கும் வளமான வாழ்க்கை அமையவும், ஒரு விளக்கை ஏற்றும்போது மற்ற விளக்குகள் ஒளி கொடுப்பது போல உங்கள் வாழ்க்கை இருக்கட்டும். தீபாவளியை தூய்மையாக கொண்டாடுங்கள் இயற்கை மாசுபடாமலும் சுற்றுபுறத்தை நண்பனாகவும் பாவித்து, சுத்தமாக கொண்டாடுங்கள்.