திருவனந்தபுரம்: பெங்களூரு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மகன் பினீஷ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருப்பவர் கோடியேரி பாலகிருஷ்ணன். இவரது மகன் பினீஷ். இவர் சில மலையாள படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், பெங்களூருவில் கடந்த இரு மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் இவருக்கு தொடர்பு இருப்பது உறுதியானதால், இரு வாரங்களுக்கு முன்பு அமலாக்கத் துறை அவரை கைது செய்தது்.