கடம்பத்தூரில் ரயில் பயணிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: கடம்பத்தூரில் ரயில் பயணிகள் சங்கம், வட்டார நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு ரயில் பயணிகள் சங்கத் தலைவர் சேகர் தலைமை தாங்கினார். இதில், கொரோனா பரவலால் ரத்து செய்யப்பட்ட பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்.  ஏற்கனவே இயக்கப்பட்டு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கடம்பத்தூர், பேரம்பாக்கம் வழியாக செல்லும் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும்.

கடம்பத்தூர் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கடம்பத்தூர் -- திருப்பாச்சூர் வரை போடப்பட்டுள்ள வேகத்தடைகளின் எண்ணிக்கையையும், உயரத்தையும் குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

Related Stories: